×

யோசுவா : 12

  • 1 : யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறுதுவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையியெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள
  • 2 : அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி, ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாப்போக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,
  • 3 : சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.
  • 4 : இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,
  • 5 : எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆண்டான்.
  • 6 : அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின்பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.
  • 7 : யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களில் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
  • 8 : யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:
  • 9 : எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,
  • 10 : எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
  • 11 : யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
  • 12 : எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
  • 13 : தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
  • 14 : ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
  • 15 : லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
  • 16 : மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
  • 17 : தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
  • 18 : ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
  • 19 : மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
  • 20 : சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
  • 21 : தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
  • 22 : கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
  • 23 : தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,
  • 24 : திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.