யோசுவா : 15

  • 1 : யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.
  • 2 : தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,
  • 3 : தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும்போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,
  • 4 : அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.
  • 5 : கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனை துவக்கி,
  • 6 : பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
  • 7 : அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத், தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்திற்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
  • 8 : அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,
  • 9 : அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
  • 10 : பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
  • 11 : அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.
  • 12 : மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
  • 13 : எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான்.
  • 14 : அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,
  • 15 : அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.
  • 16 : கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
  • 17 : அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்.
  • 18 : அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவுபெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள்; காலேப் பார்த்து; உனக்கு என்னவேண்டும் என்றான்.
  • 19 : அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
  • 20 : யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:
  • 21 : கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், எதேர், யாகூர்,
  • 22 : கீனா, திமோனா, அதாதா,
  • 23 : கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
  • 24 : சீப், தேலெம், பெயாலோத்,
  • 25 : ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
  • 26 : ஆமாம், சேமா, மொலாதா,
  • 27 : ஆத்சார்சுவால், எஸ்மோன், பெத்பாலேத்,
  • 28 : ஆத்சார்சுவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா,
  • 29 : பாலா, ஈயிம், ஆத்சேம்,
  • 30 : எல்தோலாத், கெசீல், ஒர்மா,
  • 31 : சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
  • 32 : லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
  • 33 : பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
  • 34 : சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
  • 35 : யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
  • 36 : சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினான்கு.
  • 37 : சேனான், அதாஷா, மிக்தால்காத்,
  • 38 : திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
  • 39 : லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
  • 40 : காபோன், லகமாம், கித்லீஷ்,
  • 41 : கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.
  • 42 : லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
  • 43 : இப்தா, அஸ்னா, நெத்சீப்,
  • 44 : கேகிலா, அக்சீப், மரேஷா; இநதுப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
  • 45 : எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
  • 46 : எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
  • 47 : அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.
  • 48 : மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
  • 49 : தன்னா, தெபீர் என்னப்பட்ட கிரியாத்சன்னா,
  • 50 : ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
  • 51 : கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
  • 52 : அராப், தூமா, எஷியான்,
  • 53 : யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
  • 54 : உம்தா, எபிரோனாகிய கீரியாத்அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
  • 55 : மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
  • 56 : யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
  • 57 : காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பத்து.
  • 58 : அல்கூல், பெத்சூர், கெதோர்,
  • 59 : மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
  • 60 : கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
  • 61 : வனாந்தரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,
  • 62 : நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
  • 63 : எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
மேல்